தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சியில் நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாட்ஷாவை கண்டித்து தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் அலுவலகம் முன் உள்ளிருப்பு போராட்டம்.

தேனி தொழிற்சங்க கூட்டுக் குழு இயக்கம் சார்பாக கடந்த 19ஆம் தேதி அன்று ஏஐ டியூ சி .ஆர் டி யூ ஐ சி ஐ டி யு வன வேங்கைகள் தூய்மை பணியாளர் தொழிற்சங்கம் ஆதி தமிழர் பேரவை தூய்மை பணியாளர் சங்கம் சேர்ந்து ஏஐ டியூசி அனைத்து துப்புரவு தொழிலாளர் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பிச்சைமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 19 ஆம் தேதி நடந்தது

அந்த ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக அவரை பழிவாங்கும் விதமாக விடுப்பு விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு விடுப்பு விண்ணப்பம் கொடுக்கப்படவில்லை என்று அதிகார துஷ்பிரயோகம் செய்து சர்வாதிகாரப் போக்கில் பணியமைப்பு விதிகளுக்கு மாறாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டது

என்று ஒரு உத்தரவை கொடுத்து பிச்சைமுத்துவை பழி வாங்கிய காரணத்திற்காக நகராட்சி ஆணையாளர் அலுவலகம் முன் தேனி தொழிற்சங்க கூட்டுக்குழு இயக்கத்தின் சார்பாக சரியான உத்தரவை பிறப்பிக்காமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *