தஞ்சாவூர் ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் கிங்ஸ் பதவியேற்பு விழா தஞ்சையில் நடைபெற்றது. 2024-05 ம் ஆண்டுக்கு தலைவராக ஸ்ரீதர் பதவி ஏற்றுக்கொண்டார். செயலாளராக விஸ்வநாத், பொருளாளராக நயாஸ் அகமத் ஆகியோரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

ரோட்டரி மாவட்ட கவுன்சிலர் ரமேஷ் பாபு, சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்ரீகாந்த் ஸ்ரீதரன், சிவராமகிருஷ்ணன், துணை ஆளுநர் ரமேஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டு புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டவர்களை வாழ்த்தி பேசினர். அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர்.

           நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கலந்து கொண்டு புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அனைவருக்கும் சால்வே அணிவித்தார். மேலும் கல்விக்கடன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கறவை மாடுகள் வழங்குதல், தையல் இயந்திரம், சலவை தொழிலாளர்களுக்கு அயன் பாக்ஸ் உள்ளிட்ட நல திட்டங்கள் ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டன. 
                   கடந்த ஆண்டுக்காண முன்னாள் தலைவர் செல்வகுமார், செயலாளர் தர்சீஸ்யூ மற்றும் பல்வேறு ரோட்டரி சங்கத்தில் இருந்து கலந்து கொண்ட நிர்வாகிகளான கல்யாணசுந்தரம், பழனியப்பன், ஆசிப்அலி, ஸ்ரீபதி, நயாஸ் அஹமது,  பிரகாஷ், முருகானந்தம், விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் விஸ்வநாத் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *