ராஜபாளையம் அருகே 54 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்! இருவருக்கு சிறை!
ராஜபாளையம் அருகே புத்தூர் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் டி.எஸ்.பி. ராஜாமணி உத்தரவின் பேரில் தளவாய்புரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் காவல் துறையினர் புத்தூர் அரசு மதுபானக்கடை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சாக்கு மூட்டைகளுடன் வந்த கார் மற்றும் டூவீலரை நிறுத்தி சோதனை போட்டனர். குட்கா பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 54 கிலோ குட்கா பொருள்கள், கார், பைக் மற்றும் 85 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்து தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், இனாம்கோவில்பட்டியைச் சேர்ந்த செல்லச்சாமி (62), அண்ணச்சாமி (46) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தன