ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு-ஆகஸ்ட் 14 ல் தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்ப்பாட்டம்
ஒன்றிய பாஜ அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப் பட்டதை கண்டித்தும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதிமுக சார்பில் ஆகஸ்டு 14ம் தேதி காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 30வது பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணாநகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மதிமுக அவை தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமை தாங்கி னார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. சிறப்புரை ஆற்றினார். இந்த பொதுக்குழுவில் மதிமுக பொருளாளர் மு.செந் திலதிபன். முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச் செபலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், வழக்கறிஞர் திருமலாபுரம் தி.மு. இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் பொதுக்குழு உறுப்பிவர்கள் கலந்து கொண்டனர்.
மதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :-
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றாக புறக்கணிக்கப்பட்டிருப்ப தற்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. நீட் தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட வேண்டும். தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும்; பாஜ அரசு கொண்டுவந்துள்ள 3.புதிய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
ஒன்றிய பாஜ அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப் பட்டதை கண்டித்தும், பேரிடர் நிவாரண நிதியாக ₹37,000 கோடி ரூபாய் ஒதுக் கீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் முன் வைத்த கோரிக்கையை ஒன்றிய அரசு அலட்சியப்ப டுத்தி உள்ளதை கண்டித்தும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு கோரியும், நீர் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மதிமுக சார்பில் ஆகஸ்டு 14ம் தேதி காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்ப டும் என்பது உள்ளிட்ட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.