தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுகவினருக்கு டிஜிட்டல் வடிவிலான உறுப்பினர் அடையாள அட்டை விநியோகம். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கி துவங்கி வைத்தார்.
தூத்துக்குடி
அதிமுக உறுப்பினர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய உறுப்பினர் அடையாள அட்டையை அதிமுக தலைமை வழங்கி வருகிறது.
அதன்படி 2024ம் ஆண்டிற்கான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புரட்சித் தலைவி அம்மா புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உருவம் பதித்த புதிய அடையாள அட்டையை டிஜிட்டல் முறையில் அறிமுகப்படுத்தி அந்த அடையாள அட்டைகளை அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழகத்தில் வைத்து வழங்கி அதிமுக உறுப்பினர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை துவங்கிவைத்தார்.
அதன்படி நேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட உறுப்பினர்களிடம் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கும் பணியின் முதற்கட்டமாக நேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் சம்மந்தப்பட்ட நிர்வாகிகளிடம் வழங்கி பணியை துவங்கிவைத்தார்.
அதனை மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல் பெற்றுக்கொண்டார்.
அப்போது அதிமுக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளருமான இரா.சுதாகர், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாநில வழக்கறிஞர் அணியினர் கலந்து கொண்டனர்