திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே நடுவக்களப்பால் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(50). இவர் களப்பால் கடை வீதிக்கு சைக்கிளில் சென்று விட்டு வீட்டின் அருகே வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரை வழி மறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலும் களப்பால் போலீசார் தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர். பட்டப் பகலில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இவருக்கு மனைவி அருள்மேரி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.