தேனி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தின விழாவில் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொட்டக்குடி ஊராட்சியில் மக்களின் அடிப்படைத் தேவையான சாக்கடை கால்வாய் தினமும் குடிநீர் வினியோகம் குப்பைகள் தேங்காமல் தினந்தோறும் குப்பைகளை அள்ளி கொசு தொந்தரவு இல்லாமல் பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழ உள்ளிட்ட கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ததை ஊக்கப்படுத்தும் விதமாக அதன் தலைவர் ராஜேந்திரனுக்கு சிறந்த ஊராட்சிக்கான விருதுக்கான பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.விஷ ஜீவனா வழங்கி தங்களின் பொது மக்களின் தன்னலமற்ற சேவை மென்மேலும் தொடர வேண்டுமென மனதார வாழ்த்தினார் உடன் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டி மற்றும் மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர். இதுகுறித்து விருது பெற்ற கொட்டக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் கூறும்போது எங்கள் ஊராட்சி பொது மக்களுக்கு நாங்கள் ஆற்றிய சேவையை பாராட்டி விருது வழங்கிய தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் தமிழகத்தின் தலைசிறந்த முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மற்றும் கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *