திண்டுக்கல் மாவட்டத்தில் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறுமலை ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. சிறுமலை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திண்டுக்கல் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்.வெள்ளிமலை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி நிர்வாக அலுவலர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டு சிறுமலை ஊராட்சி ஒன்றியம் பகுதியில் உள்ள அனைத்து கிராமபுர பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனைகளான சுகாதார துறை சார்ந்த ஆய்வாளர்கள் ஆலோசனையுடன் மருத்துவம் ,விவசாய துறை சார்ந்த அதிகாரிகள் விவசாய மனியம் குறித்தும், வருவாய் துறை, மற்றும் தோட்டகலை துறை குறித்து விவசாயிகளுக்கு அரசு மானியம் சார்ந்த விளக்கங்கள் அளித்தனர். கால்நடை மருத்துவர்கள் கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று வியாதிகள் மற்றும் பராமரிப்பு குறித்து அரசு துறையினர் பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.ஊராட்சி மன்ற அலுவலர் இவ்வாண்டிற்கான கணக்கு வழக்குகளை முன்வைத்து பொது மக்களின் முன்னிலையில் வாசிக்க அதற்கான சந்தேகங்களையும் தெளிவுபடுத்தினார். பொதுமக்களுக்கு குடிநீர் குழாய் மற்றும் சாக்கடை வசதி போன்ற வற்றின் நிறை குறைகளை பற்றிய ஆலோசனைகளை கிராமபுர பொதுமக்கள் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் விவாதிக்க பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *