தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மருதம்புத்தூர் அரசு மேல் பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைப்பெற்றது

ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்தார்.

பள்ளி தலைமை ஆசிரியர் மேரி பெற்றி சிரோமணி வரவேற்புரை வழங்கினார்.
பாப்பாகுடி ஒன்றிய செயலாளர் மாரி வண்ணமுத்து,ஆலங்குளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்லத்துரை மருதம்புத்தூர்
ஊராட்சி மன்ற தலைவர், பூசத்துரை,
மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ஜோக்கப்
கிங்ஸ்லி சுரேஷ் மாரிமுத்துராஜ்
ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் சிறப்பாளராக கலந்து கொண்டு பள்ளியில் பயிலும் 132 மாண்வ மாணவிகளுக்கு
விலையில்லா மிதிவண்டியினை வழங்கி பேசினார்

இவ் விழாவில் ஆசிரியர்கள்
முத்தையா முத்துராமன,தொழில் அதிபர் மணிகண்டன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஜே.கே ரமேஷ் அயலக அணி அமைப்பாளர் முத்து,மற்றும் பள்ளி ஆசிரியர்கள்
பள்ளி மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர் விழா நிறைவில்
உதவி தலைமை ஆசிரியர் ஜோக்கப் கிங்ஸ்லி சுரேஷ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *