திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் சார்பில் கோட்டூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைப்பெற்றது.

முகாமிற்கு ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் கோ.க. அண்ணாதுரை முன்னிலை வகித்தார். முகாமை தலைமை அரசு கொறடா கோவி. செழியன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

மணலூர் கோட்டூர், துகிலி,மகாராஜபுரம் உள்பட 6 ஊராட்சிகளுக்கு நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தில் வருவாய்த்துறை மூலம் இணைய வழி பட்டா மாறுதல்,குடும்ப அட்டையில் பெயர்மாற்றம்,புதுமைப்பெண் கல்வி உதவித் திட்டம்,மகர் சுய உதவிக் குழு கடன்,சுய தொழில் வங்கி கடன் என கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்து 14 துறை அதிகாரிகளிடம் மனுக்களை அளித்தனர்.

முகாமில் திருவிடைமருதூர் தாசில்தார் பாக்யராஜ்,,திமுகஒன்றிய செயலாளர்கள் மிசாமனோகரன், உதய ரவிச்சந்திரன், ஒன்றிய துணை செயலாளர் குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வி நாகராஜ்,சுமதி குமார், உமா சிங்காரவேலு,ரேவதி பாண்டியன், மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *