சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம்

போச்சம்பள்ளி அடுத்த ஆவத்துவாடி கிராமத்தில் ஸ்ரீ பட்டாளம்மன் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆவத்துவாடி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அகிலாண்டகோடி பிரமாண்டநாயகி அருள் தரும் ஸ்ரீ பட்டாளம்மன் ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழாவை இன்று புதிய சாமிகள் கங்கை பூஜை முடித்து சாமி கரிகோல ஊர்வலம் நடைபெற்றது

இதை தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தீர்த்த குடம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் இருந்து தீர்த்த குடம் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்

இதை தொடர்ந்து பின்னர் பெண்கள் சாமி ஆடி படி கோவில் வந்து அடைந்தனர் இதைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை மங்கள இசையுடன் சந்திரன், நல்ஹோரையில் கன்னியா லக்கனத்தில் கோபுர விமானம் அருள்தரும் ஸ்ரீ பட்டாளம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது இதில் பெண்கள் மற்றும் ஆவத்துவாடி ஊர் முக்கியஸ்தர்கள், சின்னமொரசப்பட்டி கோம்புகாரர்கள், தும்மல்அள்ளி கோம்புகாரர்கள், கெண்டிகானஅள்ளி கோம்புகாரர்கள், குலதெய்வ பங்காளிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *