அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் பாலமேட்டில் தேவேந்திரகுல வேளாளர் கிழக்குத் தெருவில் அமைந்துள்ள
ஶ்ரீ தொட்டிச்சிசோலை அழகி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கல இசை முழங்க விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசகம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்பணம், மகா பூர்ணகுதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜையுடன் கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வானத்தில் கருடன் வட்டமிட கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள், மற்றும் பொதுமக்களுக்கு பூஜை பொருட்களும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை
சோலைஅழகிஅம்மன், கோவில் பங்காளிகள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்..