திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

இவ்வாலயத்தில் வருடம் தோறும் ஆவணி மாதம் கடை ஞாயிறு அன்று தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று நேற்று ஆவணி கடை ஞாயிறை முன்னிட்டு பக்தர்கள் அதிகாலை முதலே ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாடைக்காவடி,தொட்டில் காவடி,பால் காவடி,அலகு காவடிகள் எடுத்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.காலை 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது. இரவு 8 மணி அளவில் ஆலயத்திற்கு அருகில் உள்ள தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் வீற்றிருந்து வலம் வந்தார்.

அது சமயம் வலங்கைமான் எஸ். ஏ. எஸ். சந்திரசேகரன், ஆலங்குடி ஏ.வி.என் பாலமுருகன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தெப்பத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ஆ.ரமேஷ், தக்கார்/ ஆய்வர் க. மும்மூர்த்தி, அலுவலக மேலாளர் தீ.சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *