அரசு கொள்கை முடிவு எடுத்து பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்-மாநில செயற்குழு தீர்மானம் :
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம் கீழ்வேளூரில் நடந்தது.இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.நாகப்பட்டினம் மாவட்ட புதிய பொறுப்பாளர்களாக தலைவர் சக்திவேல்,செயலாளர் சு.செந்தில்குமார்,பொருளாளர்
ஞானபிரகாசம்,துணை தலைவர் கலைச்செல்வி,துணை செயலாளர் பெரியார் செல்வம்,இணை செயலாளர்
காளிதாஸ் மகளிர் அணி தலைவர் திவ்யா,மகளிர் அணி துணை தலைவி அனிதா தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் அருள்செல்வி வினோதா ரம்யா ரவிசங்கர் பாலாஜி வெங்கடேசன் வெற்றிவேல் சக்திவேல் ஜமீன்முஹம்மது குணவாசுகி சீதாலக்ஷ்மி சுமன் கிஷோர் காளிதாசன் இளவரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள் பின் வருமாறு :
பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதி 181ஐ நிறைவேற்றி முதல்வர் அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
13 ஆண்டுகளாக தற்காலிகமாக அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன் பாடங்களில் பணிபுரிகின்ற 12 ஆயிரம் பேரை, நிரந்தரப்படுத்த வேண்டும்.
தற்போதைய 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தை கைவிட்டு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.
10 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பை அரசாணை வெளியிட்டு செயல்படுத்த வேண்டும்.பணிக்கால மரணத்திற்கு 10 லட்சம் வழங்க வேண்டும்பணி ஓய்வு பெறுவோருக்கு 10 லட்சம் வழங்க வேண்டும்இஎஸ்ஐ மற்றும் இபிஎப் திட்டத்தில் இணைக்க வேண்டும்
பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தீர்மானங்கள் தமிழக அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டது.
எஸ். செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் : 9487257203