கும்பகோணத்தில் மோட்டார் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்…..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு ஆட்டோ கார் வேன் மற்றும் சரக்கு வாகனங்கள் மீது ஆன்லைன் அபராதம் விதிக்கும் முறையை கைவிட கோரியும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு வழங்கியது போல் எல்லா விவர உள்ள மாவட்டங்களுக்கும் ஆட்டோக்கள் பயணிக்க அனுமதி வழங்கிட கோரியும் , தமிழக அரசு ஆட்டோவிற்கு தனி செயலியை உடனே உருவாக்கிட வேண்டும் எனவும் சாம்சங் நிறுவனத்தில் தொழில் சங்கம் அமைக்க அனுமதி வழங்கிட கோரியும் மோட்டார் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் ஆட்டோ ஓட்டுநர்கள் மாநகர தலைவர் சங்கர் தலைமையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் கண்ணன் சாலை போக்குவரத்து மாநில பொருளாளர் பார்த்தசாரதி ஆட்டோ கௌரவ தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்து கண்டன முழக்கமிட்டனர்.

இதில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கையில் கொடியுடன் கண்டனம் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *