விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் லட்சுமண பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ண ராஜா என்பவரது மகன் மணிகண்டன் வயது 27, அவரது உடன் பிறந்த சகோதரர் அருண்குமார் வயது 31 இவர்களும் இவர்களது நண்பர்கள் அருண்குமார் 31, வெங்கட்ரமணன் 30, அபினவ் 29 ஆகிய நண்பர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று விட்டு நள்ளிரவில் ராஜபாளையம் நோக்கி திரும்பி கொண்டு இருந்தார்கள். அப்பொழுது மம்சாபுரம் புதுப்பட்டி விலக்கு பகுதியில் பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி ஓடைக்குள் கார் கவிழ்ந்தது.
இதில் லட்சுமண பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் சிக்கிய வெங்கட்ரமணன், அருண்குமார் மற்றும் அபிநவ் ஆகியோர் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் தீவிர சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அசோக்பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.