திண்டுக்கல் நகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாண்புமிகு தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுபடி, தேசிய பெண்கள் ஆணையம் இணைந்து,மாண்புமிகு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி மாண்புமிகு.முத்துசாரதா குத்து விளக்கு ஏற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கான உரிமைகள் பற்றி தலைமை உரையாற்றினார். இந்நிகழ்வில் காவல்துறை சார்ந்த பெண்கள், சமூகநலத்துறை சார்ந்த பெண்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் திட்ட ஊழியர்கள், மருத்துவ பணியாளர்கள் மொத்தம் 60 பேர் கலந்து கொண்டனர்.திரிவேணி, செயலாளர் / சார்பு நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அவர்கள் நிகழ்வை தொகுத்து வழங்கி நன்றி கூறினார்.சுதந்திராதேவி மற்றும் தீபா ஆகிய வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு பெண்களுக்கான சட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *