திருவாரூர் அருகே தண்டலை ஊராட்சி விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம்..
திருவாரூர் அருகே தண்டலை ஊராட்சி விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாமினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெய் நிறுவனம் ஆகியவை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டம் 3.0-வை தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆசிரியர்களின் சிறந்த படைப்புகளை தேர்வு செய்து பரிசுத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது
நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(பொறுப்பு) சௌந்தர்ராஜன் மாவட்ட கல்வி அலுவலர் இராஜேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆசிரிய ஆசிரியைகள் பங்கேற்றனர்