கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ப.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது

இவ்விழாவில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி, நகராட்சி ஆணையாளர் ரகுராமன்,அரசு கலைக்கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியன், அரசு தொழிற்பயிற்சி நிலைய தட்டச்சர் துரைமுருகன், அரசு தொழிற்பயிற்சி நிலைய இளநிலை பயிற்சி அலுவலர் முருகேசன் ஆகியோர் பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினர்

இளநிலை பயிற்சி அலுவலர் வெங்கடேஷ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக விழா ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவின் முன்னதாக பயிற்சி அலுவலர் அனைவரையும் வரவேற்றார் விழா முடிவில் இளநிலை அலுவலர் சதீஸ்குமார் நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *