கொடைக்கானல் அடுக்கம் ரோட்டில் ஏற்பட்ட மண் சரிவை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்த நிலையில் பாறைகளில் துளையிடும் பணி துவக்கம்
திண்டுக்கல், கொடைக்கானலில் பெய்த கனமழையால் அடுக்கம் ரோட்டில் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இடிபாடுகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் மதுரை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் அடுக்கம் சாமக்காட்டுபள்ளத்தில் மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டதை தொடர்ந்து குருடிக்காடு பகுதியில் பாறைகளை துளையிட்டு அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலையினர் ஈடுபட்டனர்.