கும்பகோணம் அருகே ஒன்பதுவேலி புனித அந்தோணியார் ஆலய புதிய பங்குத்தந்தை உருவாக்க விழா ……

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஒன்பதுவேலி கிராமத்தில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தின் புதிய பங்குத் தந்தை உருவாக்க விழா கும்பகோணம் மறை மாவட்ட ஆயர்கள் ஜீவானந்தம், அந்தோணிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் வின்செந்திய வேத போதக சபை மாநில சபைத் தலைவர் அனில் தாமஸ் ,கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குருக்கள் பிலோமின் தாஸ் , கோஸ்மான் ஆரோக்கியராஜ், மாவட்ட பொருளாளர் அந்தோணி ஜோசப், பாபநாசம் பங்குத்தந்தை மரியபிரான்சிஸ்,வின்செந்திய வேத போதக சபை பங்குகளின் தலைவர் தைனீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஒன்பதுவேலி புனித அந்தோனியார் ஆலய புதிய பங்குத்தந்தையாக சபை தலைவர். தார்த்தீஸ் மறை மாவட்ட ஆயர்கள்,பங்குத்தந்தைகள், கிராம மக்கள் முன்னிலையில் சிறப்பு திருப்பலி பாடல்கள் வாசிக்கப்பட்டு, அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று நோய் நொடியின்றி நீடூடி வாழ சிறப்பு பிரார்த்தனை செய்து பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மறை மாவட்ட ஆயர்கள், பங்குத்தந்தைகள் ,கிறிஸ்தவர்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்பது வேலி கிராமவாசிகள் நாட்டாமைகள் செய்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *