திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூர் கிராமத்தில் வேங்கனுரில் வசித்து வரும் விவசாயி சக்திவேல் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளையும், கோழிகளையும் தெரு நாய்கள் கூட்டாக சேர்ந்து கடித்து குதறின. இதில் கோழிகள் மற்றும் ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.