தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் புகையிலை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி – நீதிபதிகள் பங்கேற்பு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பேரணியை மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சி எம் சரவணன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணி பொள்ளாச்சி சாலையில் கடைவீதி வழியாக அமராவதி ரவுண்டாணா சென்று மீண்டும் பள்ளி வளாகம் வந்தடைந்தது. அப்போது பள்ளி மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு போதையை ஒழிப்போம், போதை பொருட்களைத் தவிர்ப்போம் என கோஷமிட்டவாறு சென்றனர்.

பேரணியின் முடிவில்
சார்பு நீதிபதியும் வட்ட சட்டப் பணிகள் குழு, தலைவரும்மான சக்திவேல். மூத்த வழக்கறிஞர் கார்வேந்தன் ஆகியோர் மாணவர்களிடையே கூறியதாவது:-

பீடி, சிகரெட், புகையிலை இவற்றை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள், உயிர் கொல்லி நோய்களான கேன்சர், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களின் பிறப்பிடமாகவும், பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்தும்,பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் சிலரில் தங்களது பெற்றோர்கள் போதை பொருட்களுக்கு இலக்கானவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து எடுத்துரைத்து தகுந்த மருத்துவ சிகிச்சைகள் பெற்று நலவாழ்வு வாழ அவர்களை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அறிவுரை வழங்கினர். தொடர்ந்து போதைப்பொருட்களை உபயோகிக்க மாட்டோம் போதை பொருட்களை ஒழிக்க உறுதுணையாக இருப்–போம் என அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

பேரணியின் போது தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கலைச்செழியன், சங்கச் செயலாளர் ராஜேந்திரன், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *