புழல் பாலாஜி நகர் அருகே தனியார் பெல்ட் கம்பெனியில்
போர்க்லிப்ட் வாகனம் சரிந்து விழுந்து தொழிலாளி சிக்கி பலியானார் இது பற்றிய சம்பவம் வருமாறு.

புழல் பாலாஜி நகரில் ஐ பி சி கன்வேயர் பெல்ட் கம்பெனி உள்ளது இதனை மண்ணடியை சேர்ந்த அலி அஸ்தர் (வயது 50)
என்பவர் இதனை ஐந்து ஆண்டுகளாக நிர்வகித்து வருகின்றார்.

இந்த கம்பெனியில் பத்துக்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.இதில் வியாசர்பாடி கல்யாணபுரம் முதலாவது குறுக்கு தெருவை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவரின் மகன் ரூபன்( வயது 27) என்பவர் அந்த கம்பெனியில் டெக்னீஷனாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று மாலை இவர் பெல்ட் லோடு ஏற்றி செல்வதற்காக போர்க் லிப்ட் வாகனத்தை இயக்கும் போது எதிர்பாராத விதமாக அது தரையில் சரிந்து விழுந்ததில் வாகனத்தின் மேலிருந்து கீழே விழுந்ததில் அதே வாகனத்தின் அடியில் தலை சிக்கி இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதனைக் கண்ட சக தொழிலாளர்கள் உடனே இடர்பாடுகளை நீக்கி அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது பற்றிய தகவல் புழல் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.இருந்த ரூபனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *