ரஷியாவை சேர்ந்த பெண்கள் உள்பட 5 பக்தர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்தனர். அவர்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் மற்றும் நவக்கிரக கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ரஷிய பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் 6 அடி உயரம், 12 கிலோ எடை கொண்ட பித்தளை வேலை கொண்டு வந்திருந்தனர்.

பின்னர் அவர்கள் படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று, அங்கு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பின்னர் மலைக்கோவிலில் உள்ள அலுவலகத்தில் தாங்கள் கொண்டு வந்த வேலை காணிக்கையாக செலுத்தினர். வெளிநாட்டு பக்தர்கள் வேலுடன் பழனி மலைக்கோவிலில் தரிசனம் செய்ய வருகை தந்தது, மற்ற பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *