உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு பவானி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பவானி அரசு மருத்துவமனை வரை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தனியார் கல்லூரியின் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

இந்த பேரணியை கல்லூரியில் தாளாளர் வானதி மற்றும் பவானி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கோபாலகிருஷ்ணன் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் ஜனனி பவானி காவல்துறை ஆய்வாளர் சவுண்டையா ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்

எயிட்சை பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பதாய்கள் ஏந்தி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைப்போம் அவர்களுக்கு சமய உரிமை அளிப்போம் என கோஷங்கள் எழுப்பப்பட்டது

இந்த இந்த விழிப்புணர்ச்சி பேரணி பவானி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி பவானி காவல் நிலையம் அந்தியூர் பிரிவு மகளிர் காவல் நிலையம் வழியாக பவானி அரசு மருத்துவமனைக்கு சென்றடைந்தது பின்னர் இசை பற்றி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்ச்சிகள் ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது இதில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அரசு மருத்துவமனை செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *