திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி அவருக்கு வயது 81. இவர் உயிரோடு இருக்கும் பொழுது தன்னுடைய உடலை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக கொடுக்க வேண்டும் எனவும் தன்னுடைய உடல் மூலமாக மருத்துவ கல்லூரியில் பயிலக்கூடிய மாணவர்கள் தன்னுடைய உடலை பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தி நல்ல முறையில் மருத்துவம் பயில வேண்டும் எனவும் தன்னுடைய குடும்பத்தாரிடம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று மரணமடைந்தார் அவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக அவருடைய மகன் அருண் இன்று தன்னுடைய தந்தையின் உடலை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கினார்.

உடல் தானம் தந்த கிருஷ்ணமூர்த்திக்கு அரசு உரிய மரியாதை செலுத்தியது. புலிவலத்தில் உள்ள கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் அவரது உடலுக்கு தமிழக அரசின் சார்பாக திருவாரூர் கோட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு கிருஷ்ணமூர்த்தியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *