தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மற்றும் பால்வினை தொற்று குறித்த விழிப்புணர்வு முகாம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி ஆணையாளர் எஸ் பார்கவி ஆகியோர் தலைமையில் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது இந்த முகாமில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பால் வினை தொற்று உடல் பரிசோதனை செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

முகாமில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் வி குணசேகரன் மேலாளர் முனிராஜ் சுகாதார அலுவலர் மணிகண்டன் சுகாதார ஆய்வாளர் திருப்பதி மற்றும் நகராட்சி அதிகாரிகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

முகாமில் போடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் தலைமையில் டாக்டர்கள் செவிலியர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறப்பான சேவை அளித்து எய்ட்ஸ் மற்றும் பால்வினை தொற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். திமுக மாநில துணைச் திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் எம் சங்கர் நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *