அந்தியூர் அருகேயுள்ள எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

முகாமை அந்தியூர் எம்எல்ஏ., ஏஜி வெங்கடாசலம் துவக்கி வைத்தார். ஈசிஜி, சக்கரை அளவு, ரத்த அழுத்தம், கண் சிகிச்சை, மகப்பேறு, எலும்பு முறிவு உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இதில், எண்ணமங்கலம், சங்கராபாளையம், மைக்கேல்பாளையம், கெட்டிசமுத்திரம், வட்டக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும் எம்எல்ஏ., வழங்கினார்.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் சக்திகிருஷ்ணன், டாக்டர் சதீஸ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *