கன்னியாகுமரியில் நிறுவப் பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் 25 ஆண்டு வெள்ளி விழாவை ஒட்டி, மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 8 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறு வப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதை யொட்டி வெள்ளி விழா வரும் 30ம் தேதி துவங்கி 3 நாட்கள் கொண்டாடப்ப டுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதனை நினைவூட்டும் விதமாக திருவள்ளுவர் சிலை வைப்பது, பலூன் பறக்க விடுவதென தமிழ் நாடு அரசு செய்தித் துறை சார்பில் பிரசாரங்கள் வேகமடைந்துள்ளன.
இதன்பேரில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் 8 அடி உயரத் தில் நின்ற நிலையிலான, கன்னியாகுமரியில் வடிவ மைத்துள்ள சிலையை ஒத்த திருவள்ளுவர் சிலை மக் கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் திருவள்ளுவர் படத்துடன், வெள்ளிவிழா கொண்டாட்டம் குறித்த விழிப்புணர்வு பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது.
பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணி கள், வாகன ஓட்டிகள் என பலரும் இதனை பார்த்து ரசித்துச் சென்றனர்.