காரைக்கால் நலவழி துறையின் துணை இயக்குனர் (நோய் தடுப்பு) மருத்துவர் சிவராஜ் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி
திருநள்ளாறு சமுதாய நலவாழ்வு மையத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி அவர்களின் ஆலோசனையோடு திருநள்ளாறு சமுதாய நல வழி மையத்திற்குட்பட்ட பகுதியான தக்கலூர் சிவன் கோவில் தெருவில் வசிக்கும் வெளி மாநிலத்தை சேர்ந்த வடிகால் சுத்தம் செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களுக்கு சமுதாய நல வழி மையத்தின் சார்பாக அவர்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கே சென்று சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
முகாமில் புலம்பெயர்ந்த தொழிலாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் (25 நபர்கள்) அனைவரும் பங்கு பெற்று பயனடைந்தனர்.