த.வெ.க.கோவை தெற்கு மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம் கோவை சுந்தராபுரம் பகுதியில் பரபரப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் கோவை சுந்தராபுரம் பகுதியில் த.வெ.க.கோவை தெற்கு மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஆளுநரை சந்தித்த நிலையில், பெண்களுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு குற்ற செயல்களை குறிபிட்டு கல்லூரி மாணவிகளுக்கு அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன் என ஒரு கடிதத்தை எழுதியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் எழுதிய அந்த கடிதத்தை த.வெ.க.வின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கல்லூரி மாணவிகளுக்கு நோட்டீசாக வழங்கி உள்ளார்..

இதனை தொடர்ந்து ஆனந்தை சென்னை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் சென்னையில் நோட்டீஸ் வழங்கிய த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் தமிழக வெற்றி கழகத்தின் கோவை தெற்கு மாவட்டத்தினர் சுந்தராபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…

தெற்கு மாவட்ட தலைவர் கோவை விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற இதில்,தெற்கு மாவட்ட இளைஞரணி,மாணவரணி,தொண்டரணி,மகளிர் அணி என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புஸ்ஸி ஆனந்தை விடுதலை செய்ய கோரி கோஷங்கள் எழுப்பினர்..

உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்து கலைந்து செல்ல வலியுறுத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்..

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட தலைவர் கோவை கே விக்னேஷ் இளைஞரணி தலைவர் பாபு,மாவட்ட செயலாளர் அருண்பாண்டியன் தொண்டரணி தலைவர் கிரிஷ்,மாணவரணி பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *