மதுரை, நாகமலை புதுக்கோட்டை சேர்ந்த ஜெஸ்வந்த்குமார், மாலன், திலீப், திலீப் மனைவி ஜெஸிசிம்ரன் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் மூஞ்சிக்கல் அருகே உள்ள தனியார் விடுதியில் உணவு சாப்பிட்டனர். மீன் , சிக்கன் கெட்டுப் போனதால் ஏன் கெட்டுப்போன உணவுகளை கொடுக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

ஆத்திரமடைந்த விடுதியில் உள்ளவர்கள் 4 பேரையும் தாக்கி காயத்தை ஏற்படுத்தினர். இது தொடர்பாக கொடைக்கானல் போலீசார் மூஞ்சிக்கல்லைச் சேர்ந்த முகமதுஅலி, தர்வீஸ் முகைதீன், அர்சத், அரவிந்த், சர்தார், ஆசிப்ரஹ்மான் ஆகிய 6 பேரை கொடைக்கானல் நகர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *