கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் சிறைநிரப்பு போராட்டம்..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் புதிய பேருந்து நிலையம் முன்பு தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ரூ.7500 கோடி கடனை வழங்கிட வலியுறுத்தி காரல் மார்க்ஸ் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சிஐடியு மாவட்ட துணை செயலாளர் செங்குட்டுவன், வெங்கடேசன், ராமசாமி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் சரியாக வழங்கப்படவில்லை எனவும் மருத்துவ காப்பீடு, பழைய ஓய்வூதி திட்டம் அமல்படுத்த வேண்டி கையில் கண்டன பதாகைகளுடன் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை துணை காவல் கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *