மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. மாநில பொருளாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.

மாநகர் மாவட்ட செயலாளர் பாலமுருகன், மாவட்ட இணை செயலாளர் குமரவேல், துணை செயலாளர் சொர்ணவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், ஆந்திரா அரசு வழங்குவது போல், தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி களுக்கு மாத உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும்.

அந்த உதவித்தொகையை மாற்றுத்திறனாளி துறை மூலமாக வழங்க வேண்டும்.உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக மாத உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடு பட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை கைது செய்து போலீஸ் வேனில் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *