திருவாரூரில் மனித நேய வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்ட புதிய ரயில் நிலையத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழாவின் தொடக்க நிகழ்வாக விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது பேரணியை ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மனிதனை மனிதன் மதித்து மனிதநேயத்தை போற்றுவோம் என வாசகங்கள் எழுதிய விழிப்புணர்வு பதாகைகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் கையில் ஏந்தி 300-க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர்.
இப்பேரணி பழைய பேருந்து நிலையம், பனகல் சாலை வழியாக திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட், ஆதிதிராவிடர் நல துறை அலுவலர் அமுதா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.