கந்தர்வக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி மாணவர்களை பாராட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெரிச்சிவன்னியம்பட்டியில் இணைய வழிக் கல்வி வானொலியில் தன்னார்வமாக பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

இந்நிகழ்வில் வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி தலைமை வகித்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மேலும் அரசு பள்ளி மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்துவதற்காக இணைய வழிக் கல்வி வானொலி செயல்படுவதாகவும் மேலும் இதனால் மாணவர்களின் திறன்கள் வளர்ந்திருப்பது குறித்தும் மாணவச் செல்வங்களை இணைய வழி கல்வி வானொலியில் பங்கேற்க வைதத தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியையும் பாராட்டினர்.

தலைமை ஆசிரியர் சின்னராஜா அனைவரையும் வரவேற்றார்.
நிறைவாக பள்ளியில் இடைநிலை ஆசிரியர் ரமா பிரபா அவர்கள் நன்றியுரை கூறினார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *