சீர்காழி அருகே 70 பெண்களின் பெயரில் 9 மகளிர் சுய உதவி குழு மூலம் கடன் பெற்று ரூபாய் 40 லட்சம் மோசடி செய்து தலைமறைவான தம்பதி. கடனை கட்டக்கோரி வங்கிகள் மிரட்டலால் பாதிக்கப்பட்ட மக்கள் தம்பதி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா நெப்பத்தூர் தீவு கிராமத்தில் மகளிர் சுய உதவி குழு என்ற பெயரில் ரூபாய் 40 லட்சம் பணத்தைப் பெற்று மோசடி செய்து தலைமறைவாகி விட்ட தம்பதியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரி நெப்பத்தூர் தீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெப்பத்தூர் ஊராட்சி தீவு கிராமத்தில் வசித்து வந்த பிரியா அவரது கணவர் ஐயப்பன் ஆகிய இருவரும் ஒன்பது மகளிர் சுய உதவிக் குழுக்களை தொடங்கியுள்ளனர். 70க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆதார் கைரேகை பெற்று ஒவ்வொருவருக்கும் ரூபாய் 45 ஆயிரம் முதல் 95 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு வங்கிகளில் பெற்ற குழுக்கடனை கொடுக்காமல் ரூபாய் 40 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடி தலைமறைவாகி விட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களிடம் வங்கி நிர்வாகத்தினர் குழுக்கடனை செலுத்த கோரி நெருக்கடி அளிப்பதாகவும், கடனே வாங்காமல் எப்படி கடன் செலுத்த முடியும் என்றும், வாங்காத கடனை திரும்ப செலுத்த கூறும் வங்கி நிர்வாகத்தினரை தடுக்க வேண்டும், தங்களை குழு கடனிலிருந்து விடுவிக்கும்படியும், மோசடி செய்த பிரியா-ஐயப்பனை கைது செய்து அவர்கள் மோசடி செய்த 40 லட்சம் பணத்தை பெற்று வங்கியில் செலுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *