திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு லாயம், புதுத் தெருவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ரூபாய் 77.89 லட்சம் மதிப்பீட்டில் 2194.78 சதுர அடி பரப்பளவில் புதிய கிராம அறிவு மையம் கட்டடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.

இதனையடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சி தலைவர் மோகனச்சந்திரன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரிய கழகத் தலைவர் மதிவாணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். இந்நிகழ்வில் தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜேந்திரன், தஞ்சாவூர் கோட்ட தாட்கோ செயற் பொறியாளர் வெங்கடேசன், திமுக வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி, வலங்கைமான் நகர திமுக செயலாளர் பா. சிவனேசன், வலங்கைமான் பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ்மாறன், வலங்கைமான் வட்டாட்சியர் ஸ்ரீராம், வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் முரளி, சிவக்குமார், நகர திமுக தலைவர் சோம.மாணிக்கவாசகம், நகர திமுக பொருளாளர் புருஷோத்தமன், கிழக்கு ஒன்றிய திமுக பொருளாளர் நல்லம்பூர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி எஸ். ரவிச்சந்திரன், ஒன்றிய பிரதிநிதிகள் சிங்குத்தெரு எஸ்.ஆர். ராஜேஷ், வி.சி. ராஜேந்திரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செல்வமணி, ராணி சோம.மாணிக்கவாசகம், க. செல்வம்,பானுமதி vcr, ரம்ஜான்பீபி சிவராஜ், வீரமணி, நூர்ஜகான் ஜெகபர் அலி, ஆனந்த், வசந்தி பாஸ்கர், சுமதி தர்மராஜன், கட்சி நிர்வாகிகள் சதானந்தம், கோ. சண்முகசுந்தரம் யாதவ், தர்மராஜ், மது சோழன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், ஊராட்சி கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *