அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தில் வயித்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வயித்துமலை சித்தன் சிவசுப்பிரமணியன் திருக்கோவிலில் 16ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு அன்று காலை 10 மணிக்கு கொண்டையம்பட்டி மந்தை திடலில் இருந்து பறவை காவடி மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து ஐந்து கிலோமீட்டர் தூரம் உள்ள வயித்துமலை அடிவாரத்தில் உள்ள வயித்துமலை சித்தன் சிவசுப்பிரமணியன் திருக்கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர் வழிநெடுக கிராம மக்கள் சர்பத் மோர் இளநீர் தர்பூசணி உள்ளிட்ட குளிர் பானங்கள் மற்றும் பழங்களை பொதுமக்களுக்கு வழங்கி தாகத்தை தனித்தனர்

சுமார் ஒரு மணி நேர பாதையாத்திரை பயணம் முடிந்து வயித்து மலை அடிவார கோவிலுக்கு வந்தடைந்த பக்தர்கள் சிவசுப்பிரமணியனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர் ஊர்வலத்தில் பெண்கள் இளநீர் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் சாமியாடி ஊர்வலமாக சென்றது பொது மக்களை மெய்சிலிர்க்க வைத்தது தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை விழா கோவில் நிர்வாகி ஹரிபகவான் மற்றும்
விழா குழுவினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *