திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன், தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 300 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2024-2025ஆம் ஆண்டிற்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்காக நடத்தப்பெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மொத்தம் 18 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகையுடன் பாராட்டு சான்றிதழினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில்;;, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கு.சண்முகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ராஜா, தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர் திருமதி.சீதாலெட்சுமி உள்ளிட்ட பல்வேறு துறை அரசு உயர் அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *