பாபநாசம் அருகே அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு
100 நாள் பணியாளர்களுக்கு மூன்று மாத சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது உடனே வழங்க வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டையில்
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மாவட்ட துணைச் செயலாளர் தாமரைச்செல்வி தலைமையில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு சட்டத்தின் கீழ்100 நாள் வேலை பார்த்த பணியாளர்களுக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்காமல் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் உடனடியாக தமிழக அரசும், ஒன்றிய அரசும் 100 நாள் சம்பள பாக்கியை வழங்கிடவும்,100 நாள் வேலைக்கான நிதியை ஒன்றிய அரசு கூடுதலாக வழங்கிடவும் வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி மாநிலச் செயலாளர் தில்லைவனம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில்குமார், ராஜேந்திரன், வெங்கடேசன் சுந்தர்ராஜன், பழனிச்சாமி மற்றும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *