செங்கல்பட்டு மதுராந்தகத்தில் தேசிய குற்றவியல் விசாரணை ஆணையத்தின் தமிழ்நாடு மாநில யூனிட் சார்பாக நடைபெற உள்ள முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகளை இன்று நேரடியாக சென்று பார்வையிட்டதுடன். விழா கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து கலந்து ஆலோசித்து உள்ளார்.

NCIC=ன் தமிழ்நாடு மாநிலச் சேர்மன் மதிப்பிற்குரிய டாக்டர். திரு. ஹரி கிஷோர் அவர்கள் மதுராந்தகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில சீப் செக்ரட்டரி மதிப்புக்குரிய டாக்டர்.திரு.வி. ரத்தினம் அவர்கள் தலைமையில் பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு சேர்மன் அவர்களுக்கு அனைவரும் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

அனைவரும் ஒருங்கிணைந்து முப்பெரும் விழாவை சீரும் சிறப்புமாக நடத்துமாறும் NCIC -இன் தமிழ்நாடு யூனிட்டுக்கு நற்பெயர் பெற்றுத் தருமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் நிர்வாகத்தின் அடுத்த கட்டமைப்பு குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.

செய்தியாளர்:
A. ராஜபாண்டியன்
மதுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *