தஞ்சாவூர் மாவட்டம் :தஞ்சாவூர் தமிழக அனைத்து பிள்ளைமார் சங்க கூட்டமைப்பின் .தஞ்சை மாவட்ட சோழிய வெள்ளாளர்,அனைத்து வெள்ளாளர் ,வ.உ.சி.
திருமண அமைப்பகம் சார்பில்.பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு கலையரங்கத்தில். மங்கள சந்திப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர். கோவி.மோகன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் விருத்தாசலம் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் வ.உ.சி.திருஉருவ படத்துக்கு.பட்டுக்கோட்டை கருணாநிதி மாலை அணிவித்தார் மாமன்ற உறுப்பினர்.செந்தில் குமாரி,உள்ளிட்ட பெண்கள் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

திருமண வயதுடைய அனைத்து வெள்ளாளர்.பிரிவை சார்ந்த ஆண்கள்,பெண்களுக்கான, விபரங்கள் டிஜிட்டல் திரையில் ஒளிப்பரப்பப்பட்டது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெள்ளாளர் சமுதாயத்தை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *