சிதம்பரத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் ரயில் நிலையத்தில் பறிமுதல்..

சிதம்பரம் ரயில் நிலையத்தில் கேப்பாரற்று கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர் விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில் சிதம்பரம் ரயில் நிலையம் நடைமேடை எண் ஒன்றில் வந்து நின்றது அப்போது ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜீவகன், காவலர் சுரேஷ், ஆகியோர் சோதனை நடத்தினர்

இதில் ஏழு மூட்டைகளில் கேட்பாரற்று கிடந்த சுமார் 140 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டு பின்னர் அவை கடலூர் மாவட்ட குடிமை பொருள் குற்றப் பிலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *