அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கள்ளிவேலிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள வடக்கு வாசல் செல்லாயி அம்மன் கோவில் மற்றும் விஜய விநாயகர், நவகிரக சன்னதிகளில் கும்பாபிஷேக விழாவையொட்டி 48வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது
இதில் நான்கு கால யாகபூஜை உள்ளிட்ட கோமாதா பூஜை நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி அழகர்கோவில், காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து கோவில் கருவறையில் அமைந்துள்ள சுவாமிகளுக்கு ஊற்றப்பட்டு 48 வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வடக்கு வாசல் செல்லாயி அம்மன் கோவில் தக்கார் மற்றும் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.