திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே காப்பணாமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் மருத்துவர் அய்யா மருத்துவர் சின்னையா ஆகியோரின் வழிக்காட்டுதலின் பேரில் வருகின்ற மே மாதம் 11-ம் தேதி மகாபலிபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பாக காப்பணாமங்கலம் தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது இந்த நிகழ்வில் பாமக திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில்
நடைபெற இருக்கும் மாநாட்டிற்காக திருவாரூர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கடலூர் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தாமரைச்செல்வன் மயிலாடுதுறை முன்னாள் மாவட்ட செயலாளர் விமல் ஆகியோர் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு கிராம வாரியாக எத்தனை வேனில் அழைத்து வருவது, சுவர் விளம்பரங்கள் எழுதுவது போன்ற அறிவுரைகளை வழங்கினார் கள்.


இந்த கலந்தாய்வு கூட்டத்தில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் குமார் , தமிழ் நாடு உழவர் பேரியக்க மாநில துணைப் பொதுச் செயலாளர் வேணு.பாஸ்கரன் மாநில துணை தலைவர் காசிநாதன் வன் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சந்திரபோஸ் மாவட்ட அமைப்பு செயலாளர் நரசிம்மன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தீபன் உள்ளிட்ட வன்னியர் சங்க பாமக மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஒன்றிய செயலாளர் ராஜிவ் செய்திருந்தார். மேலும் கூட்டத்தில் பட்ஜெட் ராஜேந்திரன் உழவர் பேரியக்கத்தின் மாவட்ட செயலாளர் உலகநாதன் மாவட்ட இளைஞரணி செயலாளர் நகர செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *