பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை உதவிபெறும் துவக்கப்பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆண்டு விழா பல்வேறு நடனம்,கலை நிகழ்ச்சிகள் செய்து காட்டி அசத்திய மழலை குழந்தைகள்…….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா வங்காரம்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளி ஆண்டு விழா பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் தலைமை ஆசிரியர் தீபா, சிறப்பு விருந்தினர்கள் ஜெயராஜ் முருகன் சுப்பு தங்கராஜ் ஆறுமுகம் ஜோசப் சீனிவாசன், சம்பந்தம் ,தில்லைநாயகி சம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

மேலும் மாணவ மாணவிகள் கோலாட்டம் ,கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு சாகசங்கள் செய்து காட்டி கண் கவரும் வகையில் நடன இயக்குனர்களுக்கு நிகராக நடனங்கள் ஆடி மழலை குழந்தைகள் அசத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *