சின்னமனூர் பிடாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் கோல காலம் கருடன் வட்டமிட்ட அதிசயம் ஆயிரக்கணக்கான பக்தர்கள்தரிசனம் தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டை ரோடு பைபாஸ் பிரிவில் அமைந்துள்ள அருள்மிகு பிடாரி யம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் சின்னமனூர் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இந்த திருக்கோவில் வரலாறு நூற்றாண்டு பழமையான திருக்கோவிலான சிவகாமி அம்மன் உடனுறை ஶ்ரீ பூலாநந்தீஸ்வரர் திருக்கோவிலின் உப கோயிலான அருள்மிகு பிடாரி யம்மன் திருக்கோவில் பழமையான சின்னமனூர் நகருக்குள் அமைந்துள்ளதால் நகர மக்களின் காவல் தெய்வமாக இருந்து அருள் பாலித்து வருகிறார்
இராஜசிம்மன் என்ற பாண்டிய மன்னர் வீரபாண்டியை தலைமையிடமாகக் கொண்ட அள நாட்டினை சீரும் சிறப்புமாக ஆண்டு வரும் போது பூலாவனத்தில் அமைந்துள்ள சுயம்பு பூலாநந்திஸ்வரர் கோயில் மன்னன் மேற்பார்வையில் வெகு விமர்சையாக பூஜை புனஸ்காரம் நடைபெற்று வரும் வேலையில் சுரபி நதியின் அக்கரையில் மார்க்கையன் கோட்டை விக்கிரம பாண்டீஸ்வரரை வழிபடும் நிலையில் அந்த பகுதியிலேயே தங்குமிடம் அமைத்து தங்கி இருந்து வருகிறார்
வடக்கே யிருந்து மன்னன் பெரும் படையுடன் மதுரை வந்து அங்கிருக்கும் கோயில்களை இடித்து திரவியங்களை கொள்ளையிட்டு தென்மேற்கு திசை நோக்கி அள நாட்டிற்குள் வரும் பொழுது சுரபி நதிகரையோரம் சிறப்பான சிவன் கோயில் இருப்பதாக அறிந்து பூலவனமருகே படைகளை தங்க வைத்து தானும் தங்கி இருக்கிறான் பகலில் யானையைக் கொண்டு கோயிலை இடிக்க படைத் தளபதியை அனுப்ப யாணை மண்டபத்தின் ஒரு புறத்தினை இடிக்க முற்படும்போது அவன் மீதும் யானை மீதும் விழுந்து இறந்து விட மன்னனே நேரடியாக களம் இறங்கி யானை கொண்டு இடிக்க வருகிறார்.
அந்த நேரம் சிவனருளால் இரு கண்களும் பறி போய் விடுகிறது. இருந்தபோதிலும் நான் விடமாட்டேன் என்று சுளுரைத்து தங்குமிடம் செல்ல பாண்டிய மன்னன் இராஜசிம்மன் பரமனிடம் வேண்டிக் கொள்ள சிவன் வீரபத்ரனையும் காளியையும் அழைத்து ஆணையிட சுரபி நதிப் பகுதிகளில் கனமழை பெய்து அதனால் பெருவெள்ளம் ஏற்படுத்தியது
படைவீரர்களை அழித்து இழுத்துச் செல்ல மிச்ச மீதி கரைகளிலும் மர உச்சிகளிலும் இருக்கும் படைவீரர்களை காளியும் வீரபத்திரனும் வெட்டி கழுகுக்கும் காக்கைக்கும் இரை யாக்கி கோயிலையும் பாண்டிய மன்னர் மற்றும் மக்களையும் காப்பாற்றியதாக வரலாறு கூறுகிறது
சுவாமி அம்மன் காளியை பிடாரி அம்மனாக இங்குள்ள மக்களுக்கு பாதுகாவலாக இருக்க வேண்டிக்கொள்ள அன்றைய ஊரின் எல்லையில் இருந்து காவல் தெய்வமாக அரிகேசரி நல்லூரை காவல் காத்து வருகிறார் மேலும் சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோவில் திருவிழா வைபவங்களுக்கு முன்னதாக தொடக்க நிகழ்வாக பிடாரி அம்மன் கோவிலில் காப்புக் கட்டி விழா தொடங்குவது மரபாகக் கொண்டு இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது
இவ்வளவு சிறப்பு மிக்க இத்தளத்தில் அருட்கொடையாளர்கள் பஞ்சவர்ணம் பூசுதல் கருங்கல் பதித்தல் கதவு மற்றும் அலங்கார மண்டபம் கலை நயத்துடன் புதுப்பித்தல் என பல்வேறு திருப்பணிகள் தமிழ்நாடு அரசின் அனுமதியுடன் விறுவிறுப்பாக நடைபெற்றது இந்த சிறப்பு வாய்ந்த திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு யாக பூஜைகள் நடத்தப்படும் மூலவருக்கு தீபாரதனை காட்டப்பட்டு புதன்கிழமை பங்குனி மாதம் 26 ஆம் தேதி ஏப்ரல் 9ஆம் தேதி 9:30 மணி முதல் 10: 30 மணிக்குள் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது கும்பாபிஷேகத்தை யொட்டி பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் பிடாரியம்மன் சிலைக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது
பிடாரியம்மன் திருவுருவ சிலைக்கு புனித நீர் ஊற்றும் போது 10 க்கும் மேற்பட்ட கருடன் கோவிலை சுற்றி வட்டமிதை பார்த்த பக்தர்கள் பிடாரியம்மனை மனம் உருக வேண்டி கோஷமிட்டனர் இதையடுத்து புனிதநீர் கும்பாபிஷேகம் காண வந்த பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது .
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அ. நதியா தக்கார் கோ. நாராயணி மற்றும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் அலுவலர்கள் ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர் கும்பாபிஷேகத்தை ஸர்வசாதகம் சிவகாமரத்னம் சிவஸ்ரீ ஹெச். பாலசுப்பிரமணியன் பட்டர் தலைமையிலான அர்ச்சகர்கள் மிகச் சிறப்பாக நடத்தினார்கள் கும்பாபிஷேகத்தை யொட்டி காலை 10 மணி முதல் தொடர்ந்து பக்தர்களுக்கு தாகம் தீர்க்க நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வர் கா. கார்த்திகேயன் சின்னமனூர் தொழில் அதிபர் குமரேசன் ஓசூர் பிரமியம் ஷீலீங் ப்ராடக்ட் மேனேஜிங் டைரக்டர் தொழிலதிபர் கோவிந்த நகரம் ஆர் ராஜேந்திரன் காயத்ரி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆர் விரியன் சாமி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் கே எஸ் பெருமாள் சின்னமனூர் பாஜக முன்னாள் நகர தலைவர் இலோகந்திரராஜன் நகரத் தலைவர் சிங்கம் உள் பட நகர முக்கிய பிரமுகர்கள் ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பிடாரியம்மன் அருள் பெற்றனர்