பகிரிபாளையம் கிராமம் அருள்மிகு ஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலய 48 ஆம் ஆண்டு பங்குனி உத்திரசெடல் உற்சவம் விழா பகிரிபாளையம் கிராமத்தில் ஓம் சக்திவேல் முருகன் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

மேலும் பல ஆயிரக்கணக்கானோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமத்தினரும் கலந்து கொண்டனர் இவ் விழாவின் ஏற்பாடுகளை கிராம கவுன்சிலர் கவுன்சிலர் எஸ். முத்துக்குமரன் தலைவர் ஆர். கே. முருகன் மற்றும் பக்ரி பளையம் கிராமத் தலைவர் காண்டீபன், வேலு, விக்னேஸ்வரன், மற்றும் இளைஞர்கள் கிராமம் மக்கள் கலந்து கொண்டனர். விழாவினை சிறப்பித்து சக்திவேல் முருகனின் அருள் ஆசி பெற்றனர்.
மறுநாள் காலை 7 மணி அளவில் சக்திவேல் முருகன் அபிஷேக ஆராதனை செய்த பால்காவடி எடுத்த அழகு போட்டு சாமி வீதி உலா நடைபெற்றது. விழாவின் ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தார்கள் மேலும் இவ்விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *